Friday, February 10, 2012

காயல்பட்டணம் ஜாவியா தோன்றிய வரலாறு - பகுதி 3

'அதில் முதலில் திக்ரு செய்வது யார்?' என்ற கேள்விக்கு 'முதலில் நீங்கள் திக்ரு செய்யுங்கள். பிறகு நாங்கள் திக்ரு செய்கிறோம் என்ற ஷெய்குனாவின் பதில்,

ஏற்கனவே அப்பள்ளியில் ஒரு நடைமுறை அதுவும் காதிரிய்யா தரீகா நடைமுறை திக்ரு நடந்து வருகிறது என்று தெரியவருகிறதல்லவா? அவ்வாறிருக்கும்போது புதிதாக அந்த இடத்திலேயே வேறொரு நடைமுறையை கொண்டு வந்து அமல்படுத்த நினைப்பது குழப்பத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? சிந்தியுங்கள். அதன்பிறகு செனை காதர் சாகிபு அவர்கள் தற்போது இருக்கும் ஜாவியாவிற்கான இடத்தை கொடுத்தார்கள்.

தம்முடைய முயற்சி பலிக்காமல் போனது மட்டுமில்லாமல், காதிரிய்யா தரீகா காரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து தம்மை அவமரியாதை செய்ததாக தவறாக எண்ணி அவர்களின் மீது குரோதம் கொள்ள ஆரம்பித்தனர். அக் குரோதம் அக் குரோதம் காதிரிய்யா தரீகாவின் ஸ்தாபகர் ஷெய்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரை சென்றது. அதிலிருந்து காதிரிய்யா தரீகா, கௌதுல் அஃலம் மற்றும் காதிரிய்யா தரீகா ஷெய்குமார்கள், ஆலிம்கள், முரீதீன்கள் போன்றோர் மீது காயல்பட்டணத்தில் இந்தப் புதிய தரீகாவினர் குரோதமும், பகைமையும், வெறுப்பும் கொள்ளவாரம்பித்து பகைத் தீ அவர்களின் நெஞ்சங்களில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இந்த சூழ்நிலையில் ஹழ்ரத் கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உத்திரவிற்கு இணங்க காயல்பட்டணத்தில் காதிரிய்யா தரீகாவைப் பரப்புவதற்கு என்று வருகை தந்த செய்யிதினா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரரும், கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிசத்தில் உதித்தவர்களுமான ஸெய்யிதினா அப்துல்லாஹில் பகுதாதி என்பவர்கள் மீது பெரிய ஷெய்குனா அவர்களும் அவர்களின் கூட்டத்தார்களும் பகைமை பாராட்டத் துவங்கினர்

அன்னாரை மிகவும் ஏளனமாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்தனர்;. அப்துல்லா மௌலானா திருநெல்வேலி சென்றிருந்த சமயம் அவர்களை கொலை செய்யவும் ஆட்களை அனுப்பினர். அவர்கள் அவர்களிடமிருந்து தப்ப தற்காப்புக்காக வாள் சண்டை செய்தனர். இச்சம்பவம் வழக்காக பதிவாகியது. அவ்வழக்கிலிருந்து பல்வேறு குறுக்குத் தந்திரங்கள் செய்து புதிய கூட்டத்தினர் தப்பினர். இச்சம்பவம் திருநெல்வேலி கெஜட்டிலும் பதிவாகியுள்ளது.

தம் மீது இந்த பொய் கூட்டத்தினர் பரப்பிய அவதூறுகள்; , கொடுத்த சொல்லொண்ணாத்; துன்பங்கள் போன்றவற்றை தம் கைப்பட 'அஹ்ஸனுல் அஃமால்' எனும் நூலில் எழுதி வைத்தனர். இந்நூல் இன்றும் காயல்பட்டணம் மஹ்லறாவில் இருக்கிறது. அதில் தம்மை துன்பப் படுத்தியவர்களின் பெயர்களைக் கூட எழுதி வைத்துள்ளனா.;

இவ்வாறு ஸாதாத்துமார்கள், குத்புமார்கள், ஷெய்குமார்கள் போன்ற மகான்களிடம் காழ்ப்புணர்வு கொண்ட இவர்களின் முடிவுகளைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. அதே மாதிரி மஹ்லறாவை, கௌது அஃலத்தை இழிவு படுத்தியவர்கள் அடைந்த கதி பற்றி நமது ஊர் சரித்திரங்களே சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதிலும் உச்ச கட்டமாக கௌதுல் அஃலம் சொன்னது போல், இந்த பெரிய ஷெய்குனாவின் கூட்டத்தார்கள், தங்கள் கொள்கைகளையே சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து மாற்றிக் கொண்டனர் எனும் போது கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

ஷெய்குனா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் 'என்னை உண்மை என்று சொன்னவர் உறுதி பெற்றார், என்னை பொய் என்று சொல்பவர் கடும் நஞ்சை (குப்ரை) திண்பார்' என்று சொன்ன சொல் உண்மையாகிவிட்டது. தற்போது இவர்கள் இருக்கும் நிலைமை இதை உணர்த்துகிறது. தாங்கள் செய்யும் திக்ருகளில் வரும் பைத்துகளைக் கூட ஷிர்க், குப்ரு என்றும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளான வஸீலா, இஸ்திஙாதா போன்ற கொள்கைகள் ஷிர்க் என்றும், அல்லாஹ் பொய் சொல்ல சாத்தியம்தான் என்றும், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழுகையில் நினைப்பது ஆடு, மாடு, கழுதை ஏன் ஜினா செய்யும் நினைப்பில் மூழ்குவதை விட கெட்டதாகும் என்றும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உள்ள அறிவு பேயன், பைத்தியக்காரன், மதளைக்குழந்தைகளுக்கும் இருக்கும் அறிவைப்Nபுhன்றதுதான் என்றும் இன்னும் இது போன்ற ஈமானை அடியோடு பாழாக்கக் கூடிய கொள்கைகளை பரப்பவே தங்கள் நிறுவனத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும் போது அல்லாஹ்தான் நம் அனைவர்களையும் இவர்களிடம் இருந்து காப்பாற்ற  வேண்;டும். அதற்கு நமது ஷெய்கு நாயகம் கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உதவி கண்டிப்பாக கிடைக்கும். 

ஜாவியாகாரர்கள்  நமதூரில் செய்த குழப்பங்கள் இன்னும் தொடரும்....